×

பைக்குகள் மோதல் புதுமாப்பிள்ளை பரிதாப பலி

சென்னை: படப்பை அருகே, பைக்குகள் நேருக்குநேர் மோதியதில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். மேலும், 2 பேர் கவலைக்கிடமான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். இதுகுறித்து, போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காடில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைப்பெற்றது.  இந்நிலையில், நேற்று முன்தினம்  இரவு விக்னேஷ் தன்னுடன் வேலை செய்யும் ஒருவருடன் பைக்கில் வண்டலூர் – வாலாஜாபாத் சாலை வழியாக படப்பை நோக்கி சென்றார். படப்பை அருகே ஆரம்பாக்கம் சந்திப்பில், இவர்கள் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, எதிர் திசையில் அசுரவேகத்தில் வந்த மற்றொரு பைக், இவர்கள் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்….

The post பைக்குகள் மோதல் புதுமாப்பிள்ளை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Pudumappillai ,Patappai ,
× RELATED படப்பை அருகே கஞ்சா போதையில் பேக்கரி...