×

8 மணி நேரத்தில் விசாரணை முடிந்தது பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைதான தாளாளர், பள்ளி முதல்வர் உட்பட 5 பேரை சிபிசிஐடி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்தனர். அவர்களிடம் நேற்று முன்தினம் பிற்பகல் 12.30 மணி முதல் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார், 8 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதன்பின் இரவிலேயே அவர்களை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான 5 பேரும் விழுப்புரம் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி (பொ) சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது….

The post 8 மணி நேரத்தில் விசாரணை முடிந்தது பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் மீண்டும் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.

Tags : Vilappuram ,Kaniyamur ,school ,Srimathi ,Chinnaselam, Kallakkurichi district ,
× RELATED கள்ளக்குறிச்சி மதி மரண வழக்கில்...