×

மல்லசமுத்திரத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி ஏலம்

மல்லசமுத்திரம் : மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற ஏலத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி விற்பனையானது.திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்  சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 3549 மூட்டை பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். இதில், சுரபி ரகம் ₹9311 முதல் ₹10776 வரையிலும், பிடி ரகம் ₹9422 முதல் ₹11150 வரையிலும், கொட்டு பருத்தி ₹6299 முதல் ₹7665 வரையிலும் ஏலம் போனது.இதன்மூலம் ₹1 கோடியே 29 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. அடுத்த பருத்தி ஏலம் வரும் 3ம் தேதி(புதன்கிழமை) நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மாணிக்கம்பாளையம் மையத்தில், பருத்தி ஏலம் நடைறெ்றது. இதில், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 470   மூட்டை பருத்தியை கொண்டு வந்தனர். பிடி ரகம் குவிண்டால் ₹10199  முதல் ₹11202 வரை விலை போனது. சுரபி ரகம் ₹10499 முதல் ₹11352  வரை விற்பனையானது. இதன்மூலம் ₹17.21 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post மல்லசமுத்திரத்தில் ₹1.29 கோடிக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Marlasamuddar ,Mallasamudram ,Mallasamudrat ,Mallasamudra ,Agricultural Manufacturers Co-Sales Association ,Thiruchengod ,Jallasamutham ,
× RELATED மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா