×

பத்திரப் பதிவுத்துறையில் 10 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: பத்திரப் பதிவுத்துறையில் 10 மாவட்ட பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையில் நிர்வாக காரணங்களின் அடிப்படையில் மாவட்ட பதிவாளர் நிலையில் பணியிட மாறுதல்களை செய்யலாம் என முடிவு செய்து அரசு ஆணையிடுகிறது. அதன்படி சேலம்(மேற்கு)மாவட்ட பதிவாளர்(தணிக்கை) கே.அருள்சரவணன், காந்திபுரம் சார்பதிவாளராக(மாவட்ட பதிவாளர் நிலையில்) மாற்றப்பட்டுள்ளார். காந்திபுரம் சார்பதிவாளர்(மாவட்ட பதிவாளர் நிலையில்) வி.செல்வகுமாரி, கோயம்புத்தூர் மாவட்ட பதிவாளராகவும்(புலனாய்வு), பெரிய குளம் மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) ச.இயலரசி, காரைக்குடி மாவட்ட பதிவாளராகவும்(நிர்வாகம்), கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) கே.கவிதா, சேலம்(மேற்கு) மாவட்ட பதிவாளராகவும்(தணிக்கை), கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்(தணிக்கை) பி.சிவலிங்கம், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளராகவும்(நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளனர்.திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர் (தணிக்கை) கே.விஜயலட்சுமி, விழுப்புரம் மாவட்ட பதிவாளராகவும்(தணிக்கை), திருநெல்வேலி மாவட்ட பதிவாளர்(தணிக்கை) பி.கனகராஜ், கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளராகவும்( தணிக்கை), பட்டுக்கோட்டை மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) எம்.சீதாலட்சுமி, வடசென்னை மாவட்ட பதிவாளராகவும்( தணிக்கை), ஈரோடு இணை சார்பதிவாளர்(மாவட்ட பதிவாளர் நிலையில்) ஆர்.வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்ட பதிவாளராகவும்(நிர்வாகம்), திருவண்ணாமலை மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) எஸ்.வாணி, ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளராகவும்(நிர்வாகம்) மாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பத்திரப் பதிவுத்துறையில் 10 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Chennai ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...