×

பணகுடி நான்கு வழி சாலையில் பைக் மீது கார் மோதி தந்தை, மகள் பலி-ஒரு மாதத்தில் 10 பேர் உயிரிழந்த பரிதாபம்

பணகுடி : பணகுடி நான்கு வழி சாலையில் இஸ்ரோ அதிகாரி ஓட்டி வந்த கார் மோதியதில் பைக்கில் வந்த தந்தை, மகள் உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகிலுள்ள முத்துசாமிபுரத்தினை சேர்ந்தவர் ஐயப்பன் (50). கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மகள் ஜான்ஸி (24),  இவருக்கு  இசக்கிமுத்து என்பவருடன் திருமணமாகி     கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றதால் தந்தை வீட்டில் குழந்தை மதிஷாவுடன்(4)  வசித்து வந்தார். கணவரை  பிரிந்த  ஜான்ஸி வள்ளியூரிலுள்ள  பிரபல தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.  இதனால் தினமும் தனது தந்தையுடன்  பைக்கில் வள்ளியூருக்கு  பணிக்கு செல்வது  வழக்கம். நேற்று காலை வழக்கம் போல்  முத்துசாமிபுரத்திலிருந்து  வள்ளியூருக்கு தந்தையும், மகளும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது  வள்ளியூரிலிருந்து   பணகுடி அருகிலுள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்  பணிபுரியும் வள்ளியூரைச் சேர்ந்த மணிகண்டன்  என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில்   தந்தை, மகள் இருவரும்  தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த  ஜான்ஸி  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். உயிருக்கு போராடிய ஐயப்பனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த பணகுடி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர்கள் அருண்ராஜ், ஜமால், மற்றும் போலீசார்    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி இறந்தவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு   நாகர்கோவில்  அரசு  மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் மணிகண்டனை காவல்நிலையம் அழைத்து சென்று விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரேநேரத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்த சம்பவம் பணகுடி சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. …

The post பணகுடி நான்கு வழி சாலையில் பைக் மீது கார் மோதி தந்தை, மகள் பலி-ஒரு மாதத்தில் 10 பேர் உயிரிழந்த பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Bhagudi ,ISRO ,
× RELATED ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு