×

பலன் தரும் ஸ்லோகம்

ஸக்தே பஜேத்வாம் ஜகதோ ஜனித்ரீம்
ஸுகஸ்ய தாத்ரீம் ப்ரணதார்த்திஹந்த்ரீம்
நமோ நமஸ்தே குஹஹஸ்தபூஷே
பூயோ நமஸ்தே ஹ்ருதி ஸன்னிதத்ஸ்வ
- ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய வேல் ஸ்லோகம்.

பொதுப்பொருள்: அசுரர்களைக் கொன்ற சக்தி மிகுந்த வேலே! உலகத்தையே பாதுகாத்து அருளும் வல்லமை பெற்ற வேலே! வணங்குவோரின் மனபயத்தை எளிதில் போக்கும் தீரம் மிக்க வேலே, உன்னை வணங்குகிறேன். முருகப் பெருமானின் திருக்கரத்தில் அலங்காரமாக வீற்றிருக்கும் சக்தி வடிவமே! உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நீ எப்போதும் என் இதயத்தில் வீற்றிருந்து, மன உறுதி தந்து அருள வேண்டும்.
(கந்தசஷ்டி இன்று 2.11.2019 இத்துதியை பாராயணம் செய்தால் வீண் மனபயங்கள் அகலும்.)

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம்