×

பவானி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்-அதிகாரிகள் சமரசம்

பவானி : அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், குறிச்சி ஊராட்சி, செம்படாபாளையம் அருகேயுள்ள கரலாமணி கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களான இவர்கள் வசிப்பிடத்துக்கு கடந்த 3 மாதங்களாக ஆற்று குடிநீர் வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இந்நிலையில், குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டதால் ஏமாற்றமடைந்த இப்பகுதி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் சித்தார் – பூனாச்சி ரோட்டில் செம்படாபாளையம் கரலாமணி அருகே காலிக்குடங்களுடன் அமர்ந்து நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, ஓரிரு நாட்களில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.இதனால், சமாதானமடைந்த கிராம மக்கள் கலைந்து சென்றனர். திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது….

The post பவானி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்-அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Bhawani ,Bhavani ,Karalamani ,Sempadapalayam ,Ammapet Panchayat Union ,Kurichi Panchayat ,
× RELATED பவானி நகராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு