×

பார்த்திபனூரில் ஆதிதிராவிடர் விடுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்: மாணவர்கள் வலியுறுத்தல்

பரமக்குடி: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஆதிதிராவிட மாணவர்களுக்கான விடுதி உள்ளது. இந்த கட்டிடம் கட்டி ஏழு வருடங்களுக்கு மேல் ஆனாலும், இதுவரையில் பள்ளியிலிருந்து வந்து செல்வதற்கு சாலை வசதி இல்லை. இதனால், மாணவர்கள் கருவேல மரங்களுக்கு இடையே பாதைகளை அமைத்து வந்து செல்கின்றனர். இதுகுறித்து மாணவர்கள் பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் மழைகாலங்களில் விடுதிக்கு நடந்து செல்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. மேலும் விடுதியை சுற்றி தண்ணீர் தேங்கி இருப்பதால் கொசுத்தொல்லை அதிகரித்து நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக விடுதி பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, சாலை அமைத்து கொடுப்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பார்த்திபனூரில் ஆதிதிராவிடர் விடுதிக்கு சாலை அமைத்து தர வேண்டும்: மாணவர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Aditravidar ,Parthibhanur ,Paramakudi ,Paratipanur ,Dinakaran ,
× RELATED மாணவ பருவத்திலேயே திட்டமிட வேண்டும்