×

காரைக்குடியில் களைகட்டும் பதநீர் விற்பனை : உடல் சூட்டை தணிக்க குடிக்கும் மக்கள்

காரைக்குடி : காரைக்குடி பகுதியில் பதநீர் மற்றும் நுங்கு விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பூப்பாண்டிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் நுங்கு மற்றும் பதநீர் விற்பனை செய்து வருகின்றனர். உடலுக்கு குளிர்ச்சி தருவதாலும், மருத்துவ பயன்கள் நிறைந்துள்ளதாலும், பதநீர் மற்றும் நுங்குக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இதுகுறித்து பதநீர் விற்பனையில் ஈடுபட்டுள்ள மாரிச்செல்வம் கூறுகையில், ‘‘ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி பகுதியில் பனைமரங்கள் அதிகளவில் உள்ளன. சாயல்குடி பூப்பாண்டிபுரம் பகுதியில் இருந்து தினமும் அதிகாலையில் பதநீர் மற்றும் நுங்கு கொள்முதல் செய்து, இப்பகுதியில் விற்பனை செய்கிறோம். நுங்கு ஒன்று ரூ.5க்கும், 1 லிட்டர் பதநீர் ரூ.80க்கும் விற்பனை செய்கிறோம். பனைஓலை பட்டையில் குடித்தால் ரூ.20க்கு விற்கிறோம். இதற்கு இப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. பாட்டிலிலும் அடைத்து விற்பனை செய்கிறோம். அல்சர் பிரச்னை உள்ளவர்கள் பதநீர் குடிக்கலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதனை குடிக்கலாம். உடல் சூட்டை தணிக்கும். பனை ஓலையில் குடிப்பதே சிறந்தது’’ என்றார்….

The post காரைக்குடியில் களைகட்டும் பதநீர் விற்பனை : உடல் சூட்டை தணிக்க குடிக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Karaidi ,Padhaya ,Entry ,Sivagangai District ,
× RELATED பெண்ணை கர்ப்பமாக்கிய எஸ்ஐ அதிரடி சஸ்பெண்ட்