×

கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிசடங்கில் திடீர் மாற்றம்…!! உடலை புதைக்க உறவினர்கள் திடீர் முடிவு

கடலூர்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்துவந்த மாணவி ஸ்ரீமதியின் உடல் தகனம் செய்யப்பட இருந்த நிலையில், உடலை புதைக்க உறவினர்கள் திடீர் முடிவு செய்துள்ளனர். கடந்த 13ம் தேதி மாணவி பள்ளியில் உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவியின் மரணம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, பெரும் கலவரமாக மாறியது. கலவரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியை போராட்டக்காரர்கள் சூறையாடிய நிலையில், 300-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மாணவியின் மரணம் தற்கொலை என பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், அவரது சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், மாணவியின் உடல் 13ம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. தந்தை வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், மாணவியின் உடல் 2 முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பின்பு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவியின் உடல்  வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதனையிடையே உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் கள்ளக்குறிச்சி ஆட்சியர், ஐ.ஜி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து மாணவியின் உடல் சொந்தஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக இருந்தது. ஆனால், தற்போது உடலை புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஒருபுறம் ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் மாணவியின் இல்லத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது….

The post கள்ளக்குறிச்சி மாணவியின் இறுதிசடங்கில் திடீர் மாற்றம்…!! உடலை புதைக்க உறவினர்கள் திடீர் முடிவு appeared first on Dinakaran.

Tags : Kolakkurichi ,Cuddalore ,Srimathi ,Kallakkurichi ,school ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...