×

தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற செங்கை மாணவருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வரில் கடந்த 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை தேசிய ஜூனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் மகன் தர்ஷன் (14) என்ற மாணவரும் பங்கேற்றார். இவர், சென்னை வேளச்சேரியில் ஒரு தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே சென்னையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்றிருக்கிறார். இதனடிப்படையில், ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான 200 மீட்டர் நீச்சல் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதில் தர்ஷன் 2ம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் வென்று, தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் ராகுல்நாத், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ ஆகியோர் தர்ஷனுக்கு பாராட்டு தெரிவித்தனர்….

The post தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற செங்கை மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chengai ,Chengalpattu ,Bhubaneswar ,Odisha ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...