×

டிராக்டர் மோதி தொழிலாளி பலி

பல்லாவரம்: பல்லாவரம் அருகே அனகாபுத்தூரை சேர்ந்தவர் செல்வமணி (53). கட்டிட கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை சைக்கிளில் சென்று டீ குடித்துவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தார். இவர் பம்மல் பிரதான சாலை வழியே சைக்கிளில் வந்தபோது, எதிரே தறிகெட்டு ஓடிவந்த ஒரு டிராக்டர் வேகமாக மோதியது. இதில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே செல்வமணி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்து  சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான டிரைவர் கோபாலகிருஷ்ணனை போலீசார்  கைது செய்தனர்….

The post டிராக்டர் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Selvamani ,Anakaptur ,Dinakaran ,
× RELATED ஏரியில் தவறி விழுந்து கூலி தொழிலாளி பலி