×

திருவாடானை அருகே சாலை பணியை முழுமையாக முடிக்க கோரிக்கை

திருவாடானை: திருவாடானை அருகே உள்ள கொட்டாங்குடி-பறையனேந்தல் சாலை பல ஆண்டுகளாக மண்சாலையாக இருந்து வந்தது. இதனால் அப்பகுதி கிராம மக்கள் போக்குவரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஊராட்சி சார்பாக இந்த சாலையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மெட்டல் சாலையாக மாற்றும் பணி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஜல்லி கற்களை கொட்டி விட்டு, அதில் ஒரு கிலோ மீட்டர் தூரம் கிராவல் மண் கொட்டிசாலை அமைத்தனர். மீதமுள்ள ஒரு கிலோமீட்டரில் ஜல்லிகற்களை மட்டும் கொட்டிவிட்டு அப்படியே விட்டு விட்டனர்.இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருவாடானை அருகே சாலை பணியை முழுமையாக முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Tiruvadanai ,Kottanguti-Parayananthal Road ,Thiruvadan ,Dinakaran ,
× RELATED வாகனங்களின் டயரை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை