×

உடன்குடியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம்

உடன்குடி: உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக திடீரென பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, மின்சார கம்பிகளுக்கு இடையே செல்லும் மரக்கிளைகள் மின்சார கம்பியில் படும் போது, அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வந்தது. எனவே, மின்சார கம்பிகளுக்கு இடையூறாக உள்ள மரங்களின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து உடன்குடி பகுதியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இதற்காக, ஒவ்வொரு பகுதிக்கு மின்சார விநியோகிக்கப்பட்டு வரும் டிரான்ஸ்பார்மரில் மின்விநியோகத்தை நிறுத்தி மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகளை அப்புறபடுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்….

The post உடன்குடியில் மின்கம்பிகளுக்கு இடையூறான மரக்கிளைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Udungudi ,Dinakaran ,
× RELATED இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்