- கன்னியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி
- அமைச்சர்
- அனில் மகேஷ்
- சென்னை
- கள்ளக்குறிச்சி
- சின்னசேலம்
- கண்ணியமூர் சக்தி மெட்ரிக் பள்ளி
- மகேஷ்
சென்னை : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவியின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், நேற்று போராட்டம் வன்முறையாக வெடித்தது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்த விவகாரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் ஆகியோர் ஏற்கனவே கைதான நிலையில் தற்போது வேதியியல் ஆசிரியர், கணித ஆசிரியர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். நேற்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக இதுவரை 390க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவி மரண வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளியில் ஏற்பட்டுள்ள சேதம் காரணமாக, மீண்டும் அப்பள்ளி இயங்க 2 மாதங்கள் ஆகலாம். எனவே மாணவர்கள் நலன் கருதி கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களை அரசுப்பள்ளிகள் மற்றும் அருகாமையில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், யார் மீது தவறு இருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்.கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. பெற்றோர் உணர்வை புரிந்து கொண்டு தமிழக அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளும். தமிழகத்தில் அனுமதியில்லாமல் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அளிக்கக் கூடாது. மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்துள்ள வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதில் தேர்தலில் வாக்களித்து விட்டு இன்று கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன்.மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் கொடுக்கப்படும்,’என்றார். …
The post 12ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்.. கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவர்களை வேறு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை : அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.