×

எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம் : ஓபிஎஸ் மகன்

சென்னை: கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் என்று வி.ப.ஜெயபிரதீப் எச்சரித்திருந்த நிலையில், எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஓபி ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஓபிஎஸ் மகன்கள் உள்ளிட்ட 18 அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி நீக்கி நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.தனது மகன்கள் நீக்கப்பட்டதற்கு, ’’கட்சி சட்டவிதிகளின் படி எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது. உண்மையான அதிமுக நாங்கள்தான்.  எங்களை அவர்கள் நீக்கியது செல்லாது. அதிமுகவிலிருந்து ரவீந்தரநாத் எம்பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை”என கண்டனம் தெரிவித்திருந்தார்.இதுகுறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்,  “அரசியல் களத்தில் மனசாட்சியின்படி உண்மையாகவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமலும் நேர்மையாக மக்கள் பணி செய்து , யாருடைய நலனுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் சுதந்திரத்திற்காகவும் உடல் வருத்தி போராடுகிறோமோ , அவர்களாலேயே கேலியும் கிண்டலும் பொய்களும் விமர்சனங்களும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் எதிர்கொள்ளும் போது , என்னதான் அரசியல் பயணத்தில் மனம் இரும்பாக இருந்தாலும் சற்று வலிக்கத்தான் செய்கிறது .2001 – ஆம் ஆண்டு கழக உறுப்பினராக சேர்ந்த பிறகு கழக சொந்தங்கள் யாரையும் பொதுவெளியில் விமர்சிக்க கூடாது என்று கொள்கை முடிவு எடுத்ததினால் அமைதியாக இருக்கிறேன் . எந்தவித சோதனைகளை சந்தித்தாலும் புரட்சித்தலைவர் , புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடு , காலத்தால் நல்ல தீர்ப்பு வரும் வரை கழக சொந்தங்கள் உணரும் வரை  இறைவனின் துணையோடு தர்மத்தின் பாதையிலேயே பயணிப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.அதே போல் ரவீந்திரநாத் எம்.பி.,  ‘’என் அங்கீகாரம்.. நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்த ஒரே ஒரு வெற்றி . அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி.  கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம்.  அதை நீக்கவும் ஒதுக்கவும் எடுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.    கொள்ளை புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகு தூரம்.   பதவி கொடுத்தவர்களுக்கு பாதகம் விளைவித்த இடையில் வந்த ’எடை’யில்லா ’பாடி’க்கு விடை கொடுக்க வேண்டிய வந்து விட்டது நேரம் ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம் ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்’’ என்று தெரிவித்திருக்கிறார்….

The post எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.. ஒன்றரை கோடி உண்மை தொண்டர்களே ஒன்றிணைவோம் : ஓபிஎஸ் மகன் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,OPS ,Chennai ,V.K. P. ,Jaipradeep ,
× RELATED எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதி...