×

நட்பாக பழகி ேபச மறுத்ததால் ஆத்திரம்: மாணவனை கத்தியால் குத்திய சிறுவன் கைது

சென்னை: சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் வம்சி(18), ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் இவரது நண்பரான பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், வம்சி கடந்த சில மாதங்களாக சிறுவனுடன் பழகுவதை நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் நேற்று முன்தினம் மதியம் கொளத்தூர் பாலாஜி நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே வம்சி சென்று கொண்டிருக்கும்போது அவரிடம் தகராறு செய்து சிறுவன் வைத்திருந்த சிறிய கத்தியால் வம்சியின் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியில் குத்தினான். அக்கம் பக்கத்தினர் வம்சியை மீட்டு அருகில் இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் மேலும் மேல் சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கொளத்தூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கைது செய்தார். கைது செய்யப்பட்ட சிறுவன் மீது ஏற்கனவே கொளத்தூர் மற்றும் புழல் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொளத்தூர் போலீசார் சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்….

The post நட்பாக பழகி ேபச மறுத்ததால் ஆத்திரம்: மாணவனை கத்தியால் குத்திய சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Rage ,Chennai ,Vamsi ,Kolathur Ambedkar Nagar ,Chennai, PCA ,Avadi ,Dinakaran ,
× RELATED உல்லாசத்துக்கு மறுத்ததால் ஆத்திரம்:...