×

இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்; புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்களை நேற்றுமுன்தினம் நள்ளிரவு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 93 விசைப்படகுகளில் 400 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலை மீன் பிடிக்க சென்றனர். ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கார்த்திக்(24), தேவராஜ்(35), சுரேஷ்(47), திருமேணி(31), சுந்தரம்(47), இவரது தம்பி வேல்முருகன்(29) ஆகிய 6 பேரும் விசைப்படகில், நள்ளிரவு ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் காரை நகர் அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது அந்த வழியாக கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை சிறைபிடித்ததோடு, விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. ஒன்றிய  அரசு  நடவடிக்கை எடுத்து, நிரந்தர தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்….

The post இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்; புதுகை மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lankan Navy ,MANTHANANGI ,Pudukkottai ,Pudukkotta District ,Jegathapattinam ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை