சென்னை: பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி ராமகிருஷ்ணன் நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு (53), கடந்த 1ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் எதிரே நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்படி, பெரவள்ளூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், ஏற்கனவே பல பைக் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி 20வது தெருவை சேர்ந்த வெள்ள விஜி (எ) இம்மானுவேல் (22), பைக்கை திருடியது தெரியவந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், ரூ.2 லட்சம் மதிப்பள்ள பைக்கை திருடி ரூ.20 ஆயிரத்திற்கு வேலூர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. …
The post பிரபல பைக் திருடன் கைது appeared first on Dinakaran.