×

குடும்ப பிரச்னையில் சட்ட கல்லூரி மாணவி கொலை?: போலீசில் தாய் பகீர் புகார்

அண்ணாநகர்: அமைந்தகரையில் சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை யாராவது கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரிக்கின்றனர். சென்னை அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கலைவேந்தன்(30). இவர் சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது மனைவி பிரியதர்ஷினி(27). இவர்களுக்கு கடந்த 3 வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரியதர்ஷினி சென்னை அருகே மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு வக்கீலுக்கு படித்து வந்தார்.இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு பிரியதர்ஷினி தனது  வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைந்தகரை போலீசார் சென்று பிரியதர்ஷினி உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து  விசாரணை நடத்தினர். திருமணமான சில மாதங்களிலேயே கணவன் வீட்டில் பிரியதர்ஷினிக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த இரண்டு வருடத்துக்கு முன் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். சமாதானம் செய்தபிறகு மீண்டும் கணவர் வீட்டுக்கு பிரியதர்ஷினி வந்துள்ளார். இதன்பிறகுதான் பிரியதர்ஷினி தற்கொலை செய்துள்ளார். இவ்வாறு தெரியவந்துள்ளது….

The post குடும்ப பிரச்னையில் சட்ட கல்லூரி மாணவி கொலை?: போலீசில் தாய் பகீர் புகார் appeared first on Dinakaran.

Tags : Bagheer ,Annanagar ,Nadalkarai ,
× RELATED செவிலியரை தாக்கியதாக பெண் மருத்துவர் மீது புகார்