- திராவிட மாதிரிப் பயிற்சிப் பட்டறை
- திமுக
- மதுராந்தகம்
- திராவிட
- அசிருபாக்கம்
- செங்கல்பட்டு மாவட்டம்
- அச்சிறுபாக்கம் தெற்கு
- திராவிட மாதிரி
- தின மலர்
மதுராந்தகம்: திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அச்சிறுபாக்கத்தில் நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய திமுக மற்றும் அச்சிறுப்பாக்கம் பேரூர் திமுக இளைஞரணி சார்பில், திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கடமலைபுத்தூர் கிராமத்திலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு பெருந்தலைவர் கே.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராம் அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, கழக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் எம்எல்ஏ, எழுத்தாளர் மதிமாறன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், கழக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜோயல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு கலைஞரின் உருவ சிலையை இளைஞரணி சார்பில் நினைவு பரிசாக வழங்கினார். மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், பேரூர் செயலாளர் உசேன், பெரும்பேர் கண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி சங்கர், ஒன்றிய குழு உறுப்பினர் பார்த்தசாரதி, சிவக்குமார், ஜியாவுதீன், வசந்தாகோகுலக்கண்ணன், மாலதி, நந்தினி கரிகாலன், வீரராகவன், ரத்தினவேலு, பத்மாவதி ரமேஷ், சிவப்பிரகாசம், கருணாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில், அச்சிறுப்பாக்கம் பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சிவசங்கரன் நன்றி கூறினார். …
The post திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.