×

வேலூரில் நள்ளிரவு பரபரப்பு சாரதி மாளிகையில் அடுத்தடுத்து 6 கடைகளில் திருட்டு-சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

வேலூர் : வேலூர் சாரதி மாளிகையில் அடுத்தடுத்து 6 கடைகளில் புகுந்த மர்ம ஆசாமிகள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றுள்ளனர். இதுதொடர்பாக சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் சாரதி மாளிகையில் 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. மாநகராட்சி சார்பில் வாடகைக்கு விடப்பட்டுள்ள இங்கு எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர்ஸ் போன்ற பல்வேறு வகையான கடைகள் வைத்து பலர் வியாபாரம் செய்து வருகின்னர். எப்போதும் பரபரப்பாக காணப்படும். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையான என்பதால் பெரும்பாலான கடைகள் திறக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை கடைகள் திறக்கப்பட்டது. அப்போது முதல்மாடியில் உள்ள 3 கடைகளின் ஷட்டர் பூட்டு மற்றும் உள்பக்க பூட்டு ஆகியவை உடைக்கபபட்டிருந்தது. இதில் கடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் 2வது மாடியிலும் 3 கடைகள் உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த கடையின் உரிமையாளர்கள் ேவலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். விசாரணையில், செல்போன் கடையில் ₹3 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன்கள், மற்றொரு கடையில் மின்சாதன பொருட்களும் திருட்டு போயிருந்தது. பணம் வைக்கும் மேஜை டிராயர்களும் உடைக்கப்பட்டு இருந்தது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விற்பனையான பணத்தை கடைக்காரர்கள் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் பணம் திருட்டு போனதா என விசாரித்து வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் கைப்பற்றி வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது….

The post வேலூரில் நள்ளிரவு பரபரப்பு சாரதி மாளிகையில் அடுத்தடுத்து 6 கடைகளில் திருட்டு-சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vellore ,Sarathi ,House ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...