×

இறுதி ஊர்வலத்தில் ரகளை காவலர், மனைவி மீது தாக்குதல்: போதை வாலிபர்களுக்கு வலை

பெரம்பூர்: மாதவரம் பிருந்தாவன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (32). மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், மனைவி யுவஸ்ரீயுடன் (24), நேற்று முன்தினம் மேல்பட்டி பொன்னப்பன் தெரு வழியாக மாதவரத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியாக இறுதி ஊர்வலம் நடந்தது. அதில் பங்கேற்ற 10க்கும் மேற்பட்ட வாலிபர்கள் போதையில், மாலைகளை சாலையில் செல்லும் பொதுமக்கள் மீது வீசினர். தட்டிக்கேட்டவர்களிடம் தகராறும் செய்தனர். அந்த ஊர்வலத்தை கோடீஸ்வரனும், யுவஸ்ரீயும் கடக்க முயன்றபோது, சிலர், கோடீஸ்வரன் மீது மாலையை போட்டனர். உடனே பைக்கை நிறுத்திவிட்டு, இதை கண்டித்துள்ளார். அப்போது போதை வாலிபர்கள், கோடீஸ்வரனின் பைக்கை எட்டி உதைத்துள்ளனர். இதில் கோட்டீஸ்வரனும், யுவஸ்ரீயும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். மேலும் சரமாரியாக தாக்கினர். பொதுமக்கள் ஓடி வந்து, இருவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோடீஸ்வரன் அளித்த புகாரின் பேரில், வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post இறுதி ஊர்வலத்தில் ரகளை காவலர், மனைவி மீது தாக்குதல்: போதை வாலிபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Kodeeswaran ,Brindavan Garden ,Madhavaram ,
× RELATED பெரம்பூர் ரமணா நகர் பகுதியில் மெட்ரோ...