×

தெலுங்கானாவில் எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை..!!

சங்காரடி: தெலுங்கானா மாநிலம் சங்காரடி மாவட்டத்தில் எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் 15 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படன்சரோ மண்டலம் பானூர் கிராமத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் தான் இந்த கொள்ளை நடைபெற்றிருக்கிறது. கொள்ளையர்கள் ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களில் கருப்பு மையை பூசி பிறகு கேஸ் கட்டர் மூலமாக இயந்திரத்தை உடைத்து கை வரிசை காட்டியுள்ளனர். நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த சிலர் பணம் எடுக்க சென்றபோது ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பானூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஞாயிறு அன்று நிசாமாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமிய வங்கியில் இதேபாணியில் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. அதே கொள்ளையர்கள் தான் இங்கும் கைவரிசை காட்டியிருக்கிறார்களா? என்று சந்தேகம் எழுந்திருக்கிறது. …

The post தெலுங்கானாவில் எச்டிஎப்சி வங்கி ஏடிஎம்-ல் நூதன முறையில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரம் திருட்டு: கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை..!! appeared first on Dinakaran.

Tags : HDFC Bank ATM ,Telangana ,Sangaradi ,Sangaradi district ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...