×

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: பெண் தலைமறைவு

துரைப்பாக்கம், ஜூலை 8: சென்னை காரப்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பசுபதி. இவரது மனைவி ஜோதி (40). இப்பகுதியில் ஜோதி 30 வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 67 பேர் ஜோதியிடம் 2 லட்சம் முதல் 10  லட்சம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் ஜோதி தனது வீட்டை பூட்டிவிட்டு, சீட்டு பணம் ரூ.2 கோடியுடன் குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டார். இதனால், அவரிடம் சீட்டு கட்டி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து, 30க்கும் மேற்பட்டோர் நேற்று தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  …

The post ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி: பெண் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Kaliyamman Koil Street, Karapakkam, Chennai ,Jyoti ,
× RELATED போனில் மனைவியுடன் தகராறு: கணவன் தூக்கிட்டு தற்கொலை