×

திருடிய வீட்டிலேயே மதுபோதையில் கொர்ர்ர்…; வாலிபர் கைது!

மதுரை: திருடிய வீட்டிலேயே மது போதையில் படுத்து உறங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார். மதுரை அவனியாபுரம் அருகே பராசக்தி நகரை சேர்ந்தவர் ரத்தினவேல் (53). பிளைவுட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர், தலைக்ேகறிய போதையுடன் திருடுவதற்காக நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்தார். பீரோவை திறந்து 5 பவுன் நகையை எடுத்த அவர், மது போதை உச்சத்திற்கு ஏறியதால் தள்ளாடியுள்ளார். ‘வீட்டில்தான் ஆள் இல்லையே… கொஞ்சம் கண் அசந்துட்டு போகலாம்’ என முடிவெடுத்த அவர், பீரோ அருகிலேயே படுத்து தூங்கினார். தூங்கியவர் எழுந்திருக்கவே இல்லை. போதை தெளியாததால் அப்படியே மட்டையாகி விட்டார்.வெளியூர் சென்றிருந்த ரத்தினவேல், நேற்று காலை குடும்பத்துடன் வீடு திரும்பினார். வீட்டை திறந்து உள்ளே சென்ற குடும்பத்தினர், பீரோ அருகில் மர்மநபர் படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அவரை அப்படியே தூங்க விட்டு விட்டு வெளியே வந்த ரத்தினவேல், மீண்டும் வீட்டை பூட்டிவிட்டு அவனியாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். போதையில் தூங்கி கொண்டிருந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து  விசாரித்தனர். இதில், அவர் பழங்காநத்தத்தை சேர்ந்த நடராஜன் (21) என தெரியவந்தது. வழக்குப்பதிந்து அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்து ரத்தினவேலுவிடம் ஒப்படைத்தனர்….

The post திருடிய வீட்டிலேயே மதுபோதையில் கொர்ர்ர்…; வாலிபர் கைது! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Parasakthi Nagar ,Avaniyapuram, Madurai ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...