×

பலன் தரும் ஸ்லோகம் (குருவருள் கிட்ட...)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகில தர்சன தத்வ விதம்
பவ சங்கர தேசிக  மே சரணம்.
- தோடகாஷ்டகம்.

பொதுப்பொருள்: ‘வருணாலயம்’னா  தண்ணீர்  இருக்கின்ற கடல் என்று பொருள்.  கருணைக் கடலே! என்னைக் காப்பாற்றுங்கள். இந்த சம்சார சாகரத்தில்  என் மனது  தத்தளித்து தளர்ந்து போய்விடுகிறது.  எல்லா  தத்துவத்தையும் நான் இருக்கின்ற நிலைமையில் படித்துப் புரிந்து கொள்ள முடியாது. நீங்களே  அதைப்புரிய வைத்தருள வேண்டும். ஹே சங்கர குருவே! நீங்கள்தான் எனக்கு புகலிடம். இத்துதியை சங்கர ஜெயந்தியன்று பாராயணம் செய்தால் குருவருள் கிட்டும்.

Tags : Poor ,
× RELATED தோவாளை சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 29ம் ஆண்டுவிழா