×

பலன் தரும் ஸ்லோகம் : (தேவியின் திருவருள் கிட்ட...)

ஸ்ரீவித்யாம் சிவவாமபாக நிலயாம் ஹ்ரீம்கார மந்த்ரோஜ்வலாம்
ஸ்ரீசக்ராங்கித பிந்து மத்ய வஸதிம் ஸ்ரீமத் ஸபாநாயகீம்
ஸ்ரீமத் ஷண்முக விக்னராஜ ஜனனீம்
ஸ்ரீமத் ஜகன்மோஹினீம் மீனாக்ஷீம்.
மீனாட்சி பஞ்சரத்னம்.

பொதுப் பொருள்:

ஸ்ரீவித்யையாக ஈசனின் இடப் பாகத்தை ஆக்கிரமித்த கற்பகக் கொடியாய், ஹ்ரீம் எனும் மந்திரப் பொருளாய், ஸ்ரீசக்ரத்தின் மையப்புள்ளியான பிந்துவில் வாஸம் செய்பவளாய், சித்சபையின் நாயகியாய், கணபதி, கந்தன் போன்றோர்க்கு தாயாய், ஜகன் மோஹினியாய், பேரழகுப் பெட்டகமாய் அருளும் மீனாட்சி தேவியே
தங்களை வணங்குகிறேன்.

(இந்தத் துதியை வசந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் (6.4.2019  13.4.2019) மற்றும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் பாராயணம் செய்தால் தேவியின் திருவருள் கிட்டும்.)

Tags : God ,Goddess ,
× RELATED எதற்காக இறைத்தூதர்கள்?