×

கலவை ஸ்ரீகாரீசநாதர் கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவையில் உள்ள ஸ்ரீ தர்மசம்வர்த்தினி சமேத ஸ்ரீகாரீசநாதர் கோயிலில்  பங்குனி உத்திர பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாரீசநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு பிரமோற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.  

கலவை தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு பிரமோற்சவ விழா துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 26ம் தேதி வரை பிரமோற்சவ விழா நடைபெறுகிறது.  அதனை முன்னிட்டு தினமும் வெவ்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 22ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

Tags : mausoleum ,Sri Mullaperiyar ,
× RELATED ரூ.50 கோடி செலவில் அமையும் ஜெயலலிதா...