×

நிலக்கோட்டையில் அக்னிசட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்

வத்தலக்குண்டு: நிலக்கோட்டையில் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நிலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நடந்து வருகிறது. கடந்த சில நாட்களில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், பால் குடம், மாவிளக்கு எடுத்தல் என பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி எடுத்தல் நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் தீச்சட்டி எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில்
நிலக்கோட்டை, அணைப்பட்டி, முசுவனூத்து, புதுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நாடார் உறவின்முறை தலைவர் சுசீந்திரன் தலைமையில் நிர்வாகிகள் பாண்டியராஜன், ஜெயபாண்டியன், சுரேஷ்பாண்டி, கருமலைப் பாண்டியன் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags : agnisite ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி