×

தனது பயோகிராபியை படமாக்கும் முடிவை கைவிட்ட வெற்றிமாறன்

சென்னை: சமீபத்தில் ‘வாழை’ படத்தைப் பார்த்த இயக்குனர் வெற்றிமாறன் கூறியதாவது: தமிழ்ப் படவுலகில் ஒருவரைப் பற்றி அவரே படம் உருவாக்குவது என்பது இதுவே முதல்முறை என்று நினைக்கிறேன். இதை அடுத்தக்கட்ட சினிமாவாகப் பார்க்கிறேன். ஒரு இயக்குனர் பொதுவெளியில், ‘நான் இப்படிப்பட்டவன், இங்கிருந்து நான் வருகிறேன்’ என்று சொல்வது, அவரது உலகத்தைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள பெரிதும் உதவும்.

இதில் இயக்குனராகவும் மாரி செல்வராஜ் ஒரு படி மேலே உயர்ந்துள்ளார். இதில் நடித்துள்ள அனைவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தனர். யாருமே நடித்த மாதிரி தெரியவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பு, நான் எனது பயோகிராபியாக, எனது இளமைப்பருவத்தில் கிரிக்கெட் டோர்னமெண்ட் நடத்த முயற்சித்ததை வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்திருந்தேன். ஆனால், ‘வாழை’ போன்ற ஒரு படம் வந்த பின்பு, அப்படம் எதற்கு என்று விட்டுவிட்டேன்.

The post தனது பயோகிராபியை படமாக்கும் முடிவை கைவிட்ட வெற்றிமாறன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vetrimaran ,Chennai ,Vetimaaran ,Kollywood Images ,
× RELATED ஜூனியர் என்டிஆரை இயக்குவது எப்போது? வெற்றிமாறன் பதில்