×

குண்டும், குழியுமான கைக்கிளப்பட்டு சாலை-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருக்கனூர் :  திருக்கனூர் அருகே உள்ள கைக்கிளப்பட்டு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமமானது புதுச்சேரி-திருக்கனூர் மெயின் ரோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் இப்பகுதியினர் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். கைக்கிளப்பட்டிற்கும், சுத்துக்கேணிக்கும் இடையே சங்கராபரணி ஆறு உள்ளது. சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகையணையுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. படுகை அணையில் இருந்து கைக்கிளப்பட்டிற்கு இணைப்பு சாலை போடப்பட்டு உள்ளது. அந்த இணைப்பு சாலையில் இருந்து திருக்கனூர் மெயின் ரோடு, கொடாத்தூர் வரை சாலை போடப்படாமல் உள்ளது. இந்த கிராமங்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இப்பகுதியில் தெரு மின்விளக்கு இல்லாததால் இரவு நேரத்தில் இருளாக காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியே செல்வோர் அச்சப்பட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இப்பகுதியில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே புதுச்சேரி அரசு உடனடியாக இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும், இந்த சாலையில் தெரு மின்விளக்கு வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குண்டும், குழியுமான கைக்கிளப்பட்டு சாலை-சீரமைக்க மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirukanoor ,Thirukanur ,Puducheri- ,
× RELATED பிறந்து 5 நாட்களில் இறந்த பச்சிளம்...