×

காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில், சங்கீத மும்மூர்த்திகளின் ஆராதானை விழா நடைபெற்றது. காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில், 26ம் ஆண்டு விழாவாக நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகளின் ஆராதனை விழா, நேற்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து, காலை 10 முதல் 12 மணி வரை காரைக்காலில் உள்ள அனைத்து முன்னணி சங்கீத வித்வான்கள் பங்கேற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் சங்கீத மும்மூர்த்திகளின் ஆராதனைகள் நடைபெற்றது.

பின்னர், 100 கலைஞர்கள் பங்கேற்ற கீர்த்தனைகளை ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ரசித்தனர். மாலை, மாணவ, மாணவிகளின் சிறப்பு இசை ஆராதனை நடைபெற்றது. விழாவில்,  கலைமாமணி காரை சுப்பையா, தமிழ்மாமணி புலவர் திருமேனிநாகராஜன், சமாதானக்குழு உறுப்பினர் தெண்டாயுதபணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : music festival ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...