×

தொடர்மழையால் நிரம்பும் கண்மாய்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள் தொடர் மழை காரணமாக கணமாய்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து வராகநதி ஆற்றுக்கு வரும் கும்பக்கரை உள்ளிட்ட மற்ற வழித்தட ஆற்றில் தண்ணீர் சீராக வந்து கொண்டிருக்கிறது. இதனால் வராகநதி ஆற்றில் சீராக தண்ணீர் வந்து, வடுகபட்டி அருகே உள்ள ராஜவாய்க்கால் மூலம் பிரிந்து நல்லகருப்பன்பட்டி நாரணன்குளம் கண்மாய், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய், ஜெயமங்கலம் வேட்டுவன்குளம் ஆகிய கண்மாய்களுக்கு சீரான நீர்வரத்து உள்ளது. தொடர்மழை காரணமாக கண்மாய்கள் நிறைந்து கொண்டிருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post தொடர்மழையால் நிரம்பும் கண்மாய்கள்; விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Devdhanapatti ,Kanmais ,Devdanapatti ,Western Ghats… ,
× RELATED இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு