×

சாலையில் சென்றபோது ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது

ஆவடி:  ஆவடி கன்னியம்மன் நகர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் (28). இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். நேற்று காஞ்சிபுரம் செல்வதற்காக இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள், ஒரு கைக்குழந்தையை ஏற்றி கொண்டு ஆவடியில் இருந்து புறப்பட்டார். சென்னை திருப்பதி நெடுஞ்சாலை ஜெயா கல்லூரி அருகில் வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகனத்தின் முன்பக்க பகுதியிலிருந்து கரும்புகை எழுந்துள்ளது. இதனை கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தி பயணிகளை இறக்கி உள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கெல்லாம் வாகனம் முழுவது தீ மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. சுமார் அரை மணி நேரமாக தீ எரிந்து வாகனம் முழுவதும் தீக்கிரையாகியது. ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு அதிஷ்டவசமாக பயணிகள் காப்பாற்றபட்டனர். பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் வராத நிலையில் அங்கிருந்தவர்கள் தீயை அணைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பிடித்து எறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது….

The post சாலையில் சென்றபோது ஷேர் ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது appeared first on Dinakaran.

Tags : Share Auto ,Awadi ,Vijayakumar ,Awadi Kanniyamman Nagar ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில், மதுபோதையில் காவலரை தாக்க முயன்ற இளைஞர்