×

தூத்துக்குடியில் இருந்து மேல்மருவத்தூருக்கு ஆன்மிக ஜோதி தொடர் ஓட்டம்

தூத்துக்குடி: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீட நிறுவனர் பங்காரு அடிகளாரின் 79வது பிறந்தநாள் மார்ச் 3ம்தேதி நடக்கிறது. இதனையொட்டி நாடு முழுவதும் இருந்து ஆன்மிக ஜோதி கொண்டு வரப்படுகிறது. தூத்துக்குடி தெர்மல்நகர் ஆதிபராசக்தி சக்திபீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இதையொட்டி அதிகாலையில் ஆதிபராசக்திக்கு அனல் மின்நிலைய தலைமைப் பொறியாளர் நடராஜன் இளநீர் அபிஷேகம் செய்து வழிபாட்டை தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து உலக நலன் வேண்டி வேள்வி பூஜை நடந்தது. ஆன்மிக ஜோதியை அனல் மின்நிலைய மேற்பார்வைப் பொறியாளர் யமுனாராணி ஏற்றி தொடங்கி வைத்தார்.

ஜோதி மாவட்டத்திலுள்ள வழிபாட்டு மன்றங்கள் மூலம் பக்தர்கள் இல்லங்களுக்குச் சென்று வழிபாடு செய்யப்படுகிறது. பின்னர் ஜோதி தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மார்ச் 3ம்தேதி மேல்மருவத்தூர் சென்றடைகிறது. அங்கு பங்காரு அடிகளாரின் பிறந்த நாள் வேள்வி பூஜையில் தீபம் ஏற்றி தொடங்கி வைக்கப்படுகிறது.நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க வேள்விக்குழு பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் வடிவேல்ராஜன், ஜோதிக்குழுத் தலைவர் பண்டாரமுருகன், தெர்மல் சக்திபீட தலைவர் முருகேசன், செயலாளர் பிரசாத், பொருளாளர் செந்தில்குமார், துணைத்தலைவர் இசக்கியப்பன், பொறுப்பாளர் சீனிவாசன், மகளிரணி தலைவி பத்மா, இளைஞரணி பொறுப்பாளர் மாரிமுத்துகுமார், கோவில்பட்டி மன்றத் தலைவர் அப்பாசாமி, சக்திமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Jyoti ,Thoothukudi ,Melmaruvathur ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...