மன்னார்குடி:மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை மகா மாரியம்மன் கோயில் கும்பா பிஷேகம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்த திருமக்கோட்டை மகா மாரி யம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் மகா மாரியம்மன் கோயிலில் யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர் விமான கலசங் களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்று, தீபஆராதனை செய்யப் பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப் பட்டது. பின்னர் மகா மாரியம் மனுக்கு புனித நீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அதனை தொ டர்ந்து கோயிலில் விஷேச தீபாராதனை நடத்தப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வானவேடிக்கை முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது.