சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தில் கடந்த 8.7.2013 தேதி மானாம்பதி கிராமத்தை சேர்ந்த ஜெயவேல் (60), தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலை மாவட்டம் பையூர் கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன், தனது காரில் அதிவேகமாக வந்து ஜெயவேல், அருகே இருந்த தேவேந்திரன் மற்றும் சுரேஷ் ஆகியோர் மீது மோதினார். இதில் ஜெயவேல் இறந்தார். இந்த வழக்கு உத்திரமேரூர் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெகதீசனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்….
The post அதிவேகமாக கார் ஓட்டி விபத்து டிரைவருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.