×

கரூர் அருகே ராமானூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளம் போல் தண்ணீர் தேக்கம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர் : கரூர் ராமானூர் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதை விரைந்து சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் திருச்சி சாலை தெரசா கார்னர் பகுதியில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் ராமானூர் பகுதி உள்ளது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன.இந்நிலையில், ராமானூர் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் முதல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு, உடைப்பை சரி செய்து, தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது….

The post கரூர் அருகே ராமானூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளம் போல் தண்ணீர் தேக்கம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ramanoor ,Karur ,Karur Ramanoor ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...