×

உலகம் முழுவதும் 320 கோடி பேர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு: தமிழகம் திரும்பிய சத்குரு பேச்சு

கோவை: மண் காப்போம் இயக்கத்திற்காக லண்டனில் இருந்து 30 ஆயிரம் கி.மீ. மோட்டார் சைக்கிள் பயணத்தை கடந்த மார்ச் 21ம் தேதி துவங்கிய சத்குரு,  நேற்று (21ம் தேதி) தமிழகம் திரும்பினார். சத்தியமங்கலத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு கோவை வந்த சத்குரு கொடிசியாவில் நடைபெற்ற ‘மண் காப்போம்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காணொலி வாயிலாக கலந்துகொண்டார். இதனை தொடர்ந்து, நேற்று மாலை கொடிசியாவில் ‘மண் காப்போம்’ மற்றும் ‘உலக யோகா தினம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதில், கலந்து கொண்ட சத்குரு பேசியதாவது:இதுவரை 650க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மண் காப்போம் இயக்கத்திற்காக சர்வதேச அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மண் காப்போம் இயக்கத்திற்காக உலக அளவில் இதுவரை 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி உலகளவில் மொத்தம் 74 நாடுகள் மற்றும் இந்தியாவில் 8 மாநிலங்கள் இந்த இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஆனால், இந்த மண் வளத்தை காக்க இதுமட்டும் போதாது. மக்கள் ஆகிய நாம் மண் வளத்தை பற்றி அதிகளவில் பேச வேண்டும். அரசு கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு பேச வேண்டும். நம் அனைவரிடமும் இணையதள வசதிகளுடன் செல்போன்கள் உள்ளன. அதன் மூலம், தினமும் ஒரு சில நிமிடம் நம் மண் வளம் குறித்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். ஏதோ இன்றைக்கு மட்டும் மண் வளத்தை பற்றி பேசிவிட்டு மற்ற நாட்களில் மறந்து விடக்கூடாது. தொடர்ந்து நாம் மண் வளத்தை பற்றி பேச நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்….

The post உலகம் முழுவதும் 320 கோடி பேர் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு: தமிழகம் திரும்பிய சத்குரு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Mann Kaappom' Movement ,Satguru ,Nadu ,Coimbatore ,London ,Soil Conservation Movement ,Tamil Nadu ,
× RELATED திருவையாறு சத்குரு தியாகராஜர்...