×

மக்களாட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது: பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு

சென்னை:  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் சமூக பாதுகாப்பு மாநாடு பிரசார துவக்க பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நடந்தது. சென்னை மண்டல தலைவர் பக்கீர் முகமது தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஹாலித் முஹம்மது, மாநில செயலாளர்கள் நாகூர் மீரான், முஹம்மது ரசீன், செயற்குழு உறுப்பினர் முஹம்மது ரபீக் ராஜா, மண்டல செயலாளர் அகமது முகைதீன் முன்னிலை வகித்தனர். தென் சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் சாதிக் வரவேற்றார்.பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி பேசுகையில், ‘‘பாஜ அரசு 2014ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ச்சியாக மக்களாட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. வேலைவாய்ப்பை தருகிறேன் என்று ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் இன்று தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு பறிபோய் கொண்டிருக்கிறது. மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கிறார். எனவேதான் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவும் மக்களை அணி திரட்டும் பணியை துவங்கி இருக்கிறோம்’’ என்றார்….

The post மக்களாட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது: பாப்புலர் ப்ரண்ட் மாநில தலைவர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Popular Prant ,Chennai ,Popular Prant of India ,Social Security Conference ,Chennai Madi ,Popular Brunt ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...