×

ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தில் இபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள்

ஆண்டிபட்டி: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடிக்கு ஆதரவான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனியில் அவருக்கு ஆதரவான போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டப்பட்டு வந்தன. நேற்று அதிமுக நிர்வாகிகள் சிலர் ஆண்டிபட்டி பகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டரில், ‘‘கடைக்கோடி தொண்டர்களின் தலைவனே, ஒற்றை தலைமையேற்க வா..’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தில் இபிஎஸ் ஆதரவு போஸ்டர்கள் appeared first on Dinakaran.

Tags : OPS ,Andipatti ,Edapati ,Theni ,Dinakaran ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி