×

பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது: ஒன்பது கிலோ பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில் ஒரு கோயில் வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று நேற்று கஞ்சாவை பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். அந்த வழியாக வந்த ரோந்து போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது. அவர்களை பல்லாவரம் காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில், திரிசூலம், வைத்தியர் தெருவை சேர்ந்த ராஜா (38), பழைய பல்லாவரம், யூனியன் கார்பைடு காலனி பகுதியை சேர்ந்த திவாகர் (32), கோகுல் (21), பல்லாவரம், சாவடி தெருவை சேர்ந்த ஆகாஷ் (எ) ஊளை(22), ஜமீன் பல்லாவரம், மளகாநந்தாபுரம் பகுதியை சேர்ந்த ஹாசன் (எ) குள்ளா (21) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் 5 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்….

The post பல்லாவரம் அருகே கஞ்சா விற்ற 5 பேர் கைது: ஒன்பது கிலோ பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Pallavaram ,Trident ,
× RELATED உடல் பருமனை குறைப்பதற்கான...