×

மஞ்சுவிரட்டு காளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை: அண்ணன் வெறிச்செயல்

ராயக்கோட்டை: கெலமங்கலம் அருகே, முன்விரோதத்தில், விவசாயியை, அவரது அண்ணன் கத்தியால் குத்தி கொலை செய்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த தொட்டபேளூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்கண்ணா. இவரது மகன்கள் முனியப்பா(45), லகுமப்பா(40). விவசாயிகளான இருவரும், தனித்தனியே பொங்கல் பண்டிகை மஞ்சு விரட்டு விழாவுக்கான காளைகளை வளர்த்து வந்தனர். இதில் லகுமப்பா வளர்த்து வந்த காளை, போட்டிகளில் பங்கேற்ற போது சரியாக ஓடவில்லை. இதனால், அண்ணன் முனியப்பா, தனது காளைக்கு செய்வினை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து 3 மாதங்களுக்கு முன்பு தனது அண்ணனிடம் கேட்டுள்ளார். அப்போது முனியப்பாவின் நண்பர்கள் தேவராஜ்(32), சதீஷ்(22), விஜய்(25) ஆகியோர் உடனிருந்தனர். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, முனியப்பா தனது நண்பர்களுடன் போதையில் சென்றபோது, அங்கு வந்த லகுமப்பா, அவர்களை பார்த்து முறைத்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது முனியப்பா மற்றும் அவரது நண்பர்கள், லகுமப்பாவை தாக்கியதுடன், கத்தியால் காலில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த லகுமப்பா மயங்கி விழுந்தார். சம்பவ இடத்துக்கு சென்ற கெலமங்கலம் போலீசார், லகுமப்பாவை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொலை வழக்குபதிவு செய்த போலீசார், முனியப்பா மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்….

The post மஞ்சுவிரட்டு காளை வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை: அண்ணன் வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Rayakottai ,Kelamangalam ,Munvirodham ,Krishnagiri district, Kelamangalam ,
× RELATED 4 வழிச்சாலை பணிகள் தாமதமாவதால் ராயக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசல்