×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம் : 7 பேரை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் குப்வாரா, குல்காம், புல்வாமா பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காஷ்மீர் போலீசாருடன் சேர்ந்து ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது, குல்காமின் தல்காம் கன்ஜி போரா பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதே போல், குப்வாராவில் லோலாப் பகுதியில் தீவிரவாதிகளை தேடி சென்ற போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராணுவமும் பதிலடி கொடுத்தது. இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். குப்வாராவில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நேற்றே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஒரு பாகிஸ்தானிய தீவிரவாதி இன்று காலை  சுட்டுக்கொல்லப்பட்டதாகவும்  காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.ஜம்மு- காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷொகத் என்ற தீவிரவாதியும் இவர்களோடு சேர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் கூறினார். புல்வாமாவில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் லஷ்கர் – இ- தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் விஜயக்குமார் தெரிவித்தார். …

The post காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியம் : 7 பேரை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!! appeared first on Dinakaran.

Tags : Kashmir ,Srinagar ,Jammu ,Kupwara ,Kulkam ,Pulwama ,
× RELATED காஷ்மீரில் 3 தொகுதிகளில் பாஜ போட்டி...