×

பழநி அருகே காகித ஆலையில் தீ விபத்து

பழநி: பழநி அருகே உள்ள சாமிநாதபுரம் விஜி நகரைச் சேர்ந்தவர் வெங்கட்ராமன் (62). இவருக்கு சொந்தமான காகித ஆலை உள்ளது. நேற்று அந்த காகித ஆலையில் உள்ள பழைய பேப்பர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.இதுகுறித்து பழநி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத் தீ விபத்தில் சுமார் 150 டன் எடையுள்ள பழைய காகிதங்கள் எரிந்து நாசமானதாக காகித ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்….

The post பழநி அருகே காகித ஆலையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Palani ,Venkatraman ,Saminathapuram Viji Nagar ,Dinakaran ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்