×

பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவால் பெண் ஆர்.ஐ. சஸ்பெண்ட்

பணகுடி: நெல்லை அருகே பட்டா வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட வீடியோ வெளியானதால் ஆர்ஐ அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே துரைகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 4 பேர் புதிதாக அரசு ஒதுக்கிய நிலங்களில் வீடு கட்டி உள்ளனர். வீடுகள் கட்டப்பட்ட மனைக்கு பட்டா கேட்டு, பணகுடி ஆர்ஐ ஜான்சி ராணியை அணுகினர். அப்போது அவர், பட்டா வழங்குவதற்கு 4 பேரிடம் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம். வருவாய்த்துறை உயர் அலுவலர்களுக்கு இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும். பட்டா வழங்கும் போது தன்னை கவனிக்க வேண்டுமெனவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்த உரையாடல் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் விஷ்ணு விசாரணை நடத்த உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில், பணகுடி ஆர்ஐ ஜான்சிராணியை சஸ்பெண்ட் செய்து, நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் உத்தரவிட்டார்….

The post பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட வீடியோவால் பெண் ஆர்.ஐ. சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Panagudi ,RI ,Patta ,Nellai ,Nellai District ,Dinakaran ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்