×

மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது

சேலம்: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள வளையசெட்டிபட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மனைவி வள்ளியம்மாள் (72). இவர் வீட்டிற்கு கடந்த 16ம் தேதி, பைக்கில் வந்த வாலிபர் குடிக்க தண்ணீர் கேட்டார். பிறகு தூரத்து உறவினர் போல நடித்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த அரை பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 18ம் தேதி, இளம்பிள்ளை ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நல்லண்ணம்பட்டி பகுதியை சேர்ந்த ராஜூ என்பவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ₹450ஐ மர்மநபர் பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்தார். இந்த நிலையில், இடங்கணசாலை அடுத்த காடையாம்பட்டி ஏரி அருகே போலீசார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த நபர் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர் ஓமலூர் அருகே உள்ள கட்டிக்காரனூரை சேர்ந்த ராஜா மகன் நரேஷ்குமார் (28) என்பதும், வளையசெட்டிபட்டியில் மூதாட்டியிடம் நகை பறித்தது மற்றும் இளம்பிள்ளையில் வழிமறித்து பணம் பறித்ததும் தெரியவந்தது. நரேஷ்குமார் மீது மல்லூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கும், ஆட்டையாம்பட்டி, ஓமலூர், தர்மபுரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, பலாத்காரம் என பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது 2 வழக்குகளை பதிவு செய்து, சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்….

The post மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ponnusamy ,Valliammal ,Brangachettipatti ,Yumupillai ,Salem district ,Dinakaran ,
× RELATED குப்பைக்கழிவால் துர்நாற்றம்