×

வைகுண்ட ஏகாதசி விழா : அபயபிரதான ரங்கநாத கோயிலில் மோகினி அலங்காரம்

கரூர்: வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு மோகினி அலங்கார நிகழ்ச்சி நடை பெற்றது. கரூரில் உள்ள அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா வினை  முன்னிட்டு கடந்த 8ம்தேதி அன்று பகல் பத்து நிகழ்ச்சிகள் துவங்கியது. இதனை  முன்னிட்டு தினமும் இந்த கோயிலில் பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சுவாமிக்கு மோகினி அலங்கார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ராப் பத்து நிகழ்வுகள் இன்று காலை முதல் துவங்குகிறது. முன்னதாக, இந்த கோயிலில் அதிகாலை 5.30மணிக்கு சொர்க்கவாசல்  திறப்பு நிகழ்ச்சி நடை பெறுகிறது. விழாவு க்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை அதிகாரிகள்
செய்து வருகின்றனர்.

Tags : Vaikuntha Ekadasi Festival ,Mohini ,Abi Raghira Ranganatha Temple ,
× RELATED ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி...