×

திருமண நிகழ்ச்சியில் ‘டான்ஸ்’ தகராறு; மாப்பிள்ளை, பெண் வீட்டார் கடும் மோதல் இரும்பு கம்பியால் தாக்குதல்: 4 பேர் படுகாயம்

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நேற்றிரவு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் மாப்பிள்ளை, பெண் வீட்டார் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரும்பு கம்பி, தடியால் தாக்கியதில் 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த மைக்கேல்ராஜ் மற்றும் கப்பியாம்புலியூரை சேர்ந்த பரணிஷா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் பெண்வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் மற்றும் இரு தரப்பு உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் டிஜே நடனம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அதிக சத்தத்துடன் இசை ஒலிக்க இளைஞர்கள் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அப்போது நடனம் ஆடுவதில் ஏற்பட்ட மோதல் காரணத்தினால் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் மாப்பிள்ளை வீட்டைச் சேர்ந்தவர்கள் தடி, இரும்பு கம்பி மற்றும் கற்களைக் கொண்டு தாக்கியதில் பெண் வீட்டைச் சேர்ந்து 4 இளைஞர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் திருமண மண்டபமே போர்க்களம் போல் காட்சியளித்தது. இந்தச் சம்பவம் குறித்து திருமணம் மண்டபத்தின் உரிமையாளர் விக்கிரவாண்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோதல் சம்பவம் குறித்து விசாரித்தனர். திருமண மண்டபத்தில் நடந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post திருமண நிகழ்ச்சியில் ‘டான்ஸ்’ தகராறு; மாப்பிள்ளை, பெண் வீட்டார் கடும் மோதல் இரும்பு கம்பியால் தாக்குதல்: 4 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Vikravanandi ,Kasp ,
× RELATED விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...